கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்ற பிம்பத்தைச் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது செந்தில்பாலாஜியின் கோவை எண்ட்ரி. கோவை முழுக்க அவருக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பு அதிமுகவைக் கதிகலங்க வைத்திருக்கிறது.
எதிரிகள் பரப்பும் வதந்திகளையும் அவதூறுகளையும் அசால்ட்டாக டீல் செய்யும் செந்தில் பாலாஜி, பத்திரிகையாளர்களின் எல்லா கேள்விகளுக்கும் பளிச்செனப் பதில் சொல்கிறார்.
கோவையை திமுக-வின் கோட்டையாக மாற்றுவதற்கு பம்பரமாக சுழன்று வரும் அவர், ஒரு காலை வேளையில் இளைஞர்களுடன் உரையாடினார்.
கரூரை விட்டுவிட்டு கோவைக்கு வர என்ன காரணம்?
“நான் கரூருக்குத்தான் விருப்ப மனு கொடுத்தேன். ஆனால், எங்க தலைமை இங்கே அறிவிச்சாங்க. தலைமை சொல்லும் இடத்தில் நிற்பது என் கடமை”‘
பலரும் சொகுசு வாகனங்கள்ல பிரசாரம் செய்யும்போது, நீங்க தொகுதி முழுக்க நடந்தே போறீங்களே?
“எல்லோர் வீட்டிலும் ஆரத்தி எடுக்கிறாங்க. ஆரத்தி தட்டோட தாய்மார்கள் கீழே நிக்கும்போது அவங்க அன்புக்கு மதிப்பு கொடுக்கணும். நடந்து போனாதான் அவங்ககூட பேச முடியும். அவங்க கோரிக்கையைக் கேட்க முடியும்.”
கோவையின் வளர்ச்சிக்கு உங்களிடம் இருக்கிற தரமான திட்டம்னா எதைச் சொல்லுவீங்க?
“கோவையில் உள்ள 10 தொகுதியிலும் திமுக எம்.எல்.ஏ-க்கள் இல்லாத போதிலும் செம்மொழி பூங்கா, பெரியார் அறிவுலம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம், தங்க நகை வியாபாரிகளுக்கு தங்க நகை பூங்கா, குடிநீர் தேவைக்கு பில்லூர் 3-ம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய தொழில் பூங்காக்கள் ஆகிவற்றை கொடுத்துள்ளோம்.
ஏர்போர்ட் விரிவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கிறது. இதுதவிர, பேருந்து நிலையம், பார்க், சாலை வசதிகள் என ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளைச் செய்துள்ளோம்.
கோவையில் நாங்கள் வென்றால் இன்னும் பலமடங்கு செய்வோம். உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வருடத்துக்கு 5,000 கோடி ரூபாய் வீதம் 5 வருடத்தில் ரூ 25,000 கோடி அளவுக்கான நிதியைக் கொண்டு வந்து கோவையை ஹை-டெக்கான நகரமா மேம்படுத்தணும்ங்கிறது என் கனவு. அது நிறைவேறும்னு நம்புறேன்”