வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் – தங்கதமிழ்செல்வன் பேச்சு

Spread the love

வனத்தில் வசிக்கும் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்கக் கோரியும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக ரத்துச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அதிமுக, தவெக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலைவாழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

போராட்டத்தில் பேசிய தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், “தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30 ஆண்டுகளில் இந்த அளவுக்கு ஒரு பெரிய போராட்டத்தை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் சொத்தை, எங்களுக்கு கொடுத்துவிட்டு மீதி சொத்தை வனத்துறை எடுத்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை; ஆனால் மக்களை வெளியேற்றுவதில் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விடுமுறை எடுத்து உங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற நான் உங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஏதாவது விபரீதம் செய்தால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்” என பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *