விழாவின் நிறைவாக காவல்துறையினர் ட்ரம்பட் மியூசிக் வாசிக்கையில், நடைமுறைப்படி வாசிக்க வேண்டிய இசைக் கோர்ப்புகளை வாசித்து முடித்துவிட்டு அரசு விழா என்பதை மறந்து விஜய்யின் சிங்கப்பெண்ணே, ஆளப்போறான் தமிழன் பாடல்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டனர். முதல்வரிடம் உயரதிகாரிகள் ஐஸ் வைத்து காரியம் சாதிக்க இப்படியொரு புதிய வழியா என பத்திரிகையாளர்கள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் டிஜிபி மகேஷ் குமார் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தேர்வாகியிருக்கும் காவலர்களைச் சந்தித்து உத்வேகமளிக்கும் வகையில் பேசி பணிநிமித்தமாக சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார்.