இதே போல, தங்க நகைகளை விற்றால் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கட்ட வேண்டும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும்போது லாபம் கிடைத்தாலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபம் கிடைத்தாலும், கிடைக்கும் லாபத்துக்கேற்ப வரி கட்டியாக வேண்டும்.
பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூதலீடு செய்து கிடைக்கும் லாபத்துக்கு இரு விதமாக வரி விதிக்கப்படுகிறது. ஒன்று, குறுகிய காலம்; இரண்டாவது, நீண்ட காலம். குறுகிய காலம் என்பது ஓராண்டு ஆகும்.
உதாரணமாக, ஒருவர் பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறார். ஒரே ஆண்டில் அது ரூ.12 லட்சமாக உயர்கிறது. ஓராண்டுக்கும் முதலீட்டைத் திரும்ப எடுத்தால், லாபமாகக் கிடைக்கும் ரூ.2 லட்சத்துக்கு 20% அதாவது, ரூ.40 ஆயிரம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.
ஆனால், ஓராண்டுக்குப் பிறகான நீண்ட காலத்தில் முதலீட்டைத் திரும்ப எடுத்தால், கிடைக்கும் லாபத்துக்கு 12.5% வரி கட்டினால் போதும். அதாவது, ரூ.25 ஆயிரம் மட்டும் மூலதன ஆதாய வரியாகக் கட்டினால் போதும்.
ஆனால், ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் லாபத்தைத் திரும்ப எடுக்கும்போது, ஒரு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை லாபமாகக் கிடைக்கும் தொகைக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை உண்டு என்பதால், ரூ.2 லட்சத்துக்கு மூலதன ஆதாய வரி கட்டுவதற்கு பதிலாக, ரூ.1.25 லட்சம் வரிச் சலுகை போக, வெறும் ரூ.75 ஆயிரத்துக்கு 12.5% மூலதன ஆதாய வரி அதாவது, வெறும் ரூ.9,375 வரி கட்டினால் போதும்.