வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த (SIR) பணியின் போது 91 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில், பெரும்பான்மையான வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் என ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்த நிலையில், சுமன் மொல்லா என்பவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் (SIR) பணியின்போது, எனது மருமகன் நாசீரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு முழுமையாக விசாரித்து இன்னும் தீர்ப்பு வரவில்லை என்ற போதிலும், அவர் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும். நாசீர் ஓர் இந்தியக் குடிமகன் என்பதற்கு அவரது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பான் அட்டை மற்றும் வங்கிப் புத்தகம் என அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன.” எனக் குறிப்பிட்டிருந்தார்.