விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? | Annamalai Launches New Party in Tamil Nadu: Big Battle for OBC MBC Votes After TVK Dalit Shift

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் அடங்காத நிலையில், மாநில அரசியலில் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான கு. அண்ணாமலை, பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் சமன்பாடுகளை முழுமையாக மாற்றியமைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவாக்கியுள்ள தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கி மாற்றம், தற்போதைய அரசியல் களத்தை முற்றிலும் புதிய திசையில் திருப்பியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் இந்த வாக்கு வங்கி பெரும்பாலும் அப்படியே தவெக பக்கம் சென்றது.

Annamalai

இந்தச் சூழலில் அண்ணாமலையின் புதிய கட்சி எந்த வாக்கு வங்கியை நோக்கி நகரும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. தேர்தல் பகுப்பாய்வுகளின்படி, தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அடுத்த சில தேர்தல் சுழற்சிகளுக்கு தவெகவுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, அண்ணாமலைக்கு இந்த வாக்கு வங்கியில் உடனடி அதிரடி மாற்றம் கொண்டு வருவது சவாலானது.

இதனால், அண்ணாமலை திட்டம் முழுக்க ழுக்க ‘தலித் அல்லாத’ வாக்கு வங்கியை நோக்கியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முபெரும்பான்மை சமூகங்களான ஓபிசி, எம்பிசி மற்றும் பொதுப்பிரிவு வாக்குகளை ஒருங்கிணைப்பதே அவரது முதன்மை இலக்காக இருக்கும். இந்த சமூகங்களை ஒன்றிணைத்து, தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுப்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ள அண்ணாமலை, ஓபிசி சமூகங்களிடையே தனிப்பட்ட பிரபலத்தை கொண்டுள்ளார். பாஜகவில் இருந்தபோது மத அடையாளம் காரணமாக தயக்கம் காட்டிய பல நடுத்தர வர்க்க விவசாயிகள், வணிகர்கள் மற்றும் இளைஞர்கள், இப்போது அவரது தனி கட்சியை வரவேற்கும் வாய்ப்புகள் அதிகம். கொங்கு மற்றும் இடைநிலை ஓபிசி சமூகங்கள், பாரம்பரியமாக அதிமுக-திமுக இடையே மாறி மாறி வாக்களித்து வந்துள்ளன. இந்த வாக்குகளை தன் பக்கம் ஈர்ப்பதே அண்ணாமலையின் முக்கிய இலக்கு.

மேலும், படித்த நடுத்தர வர்க்கம், நகர்ப்புற இளைஞர்கள், ஊழலுக்கு எதிரான அரசியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம் (Technocracy) ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களை இலக்காக்கி அண்ணாமலை பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜகவின் அதிருப்தி வாக்குகளையும், திராவிடக் குடும்ப அரசியலால் சோர்வடைந்த மாற்று சமூகங்களின் ஆதரவையும் திரட்ட அவர் முயற்சி எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையே ஓபிசி-எம்பிசி வாக்குகளுக்கான கடுமையான போட்டி உருவாகியுள்ளது. தலித்-சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துள்ள திமுக, தனது பல தசாப்த கால திராவிட அமைப்பு மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஓபிசி வாக்குகளை தக்கவைக்க ‘மெகா பிளான்’ ஒன்றை வகுத்து வருகிறது. இதற்கு எதிராக அண்ணாமலை தனது இளமை, ஐபிஎஸ் பின்னணி, புதிய அரசியல் மொழி மற்றும் சமூக இன்ஜினியரிங் உத்திகளைப் பயன்படுத்தி போட்டியிடுவார்.

தமிழக அரசியலில் இனி மும்முனைப் போட்டி உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. ஒருபுறம் தவெகவின் தலித்-மைனாரிட்டி கோட்டை, மறுபுறம் ஓபிசி-எம்பிசி வாக்குகளுக்கான திமுக, அதிமுக மற்றும் அண்ணாமலை இடையேயான கடுமையான போராட்டம். இந்தப் போட்டி எதிர்கால தமிழக அரசியலை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதை அடுத்த சில மாதங்கள் தீர்மானிக்கும்.

அண்ணாமலையின் புதிய இயக்கம் தமிழகத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெறும், ஓபிசி சமூகங்களை எந்தளவு ஒருங்கிணைக்கும், மற்றும் திராவிடக் கட்சிகளுக்கு இது எத்தகைய சவாலை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சிகள் அமையும். தமிழக வாக்காளர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த நகர்வு, மாநில அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *