வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49.
இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான “வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். ‘மாநகரம்’ ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘வில் அம்பு’வை சுசீந்திரன் தயாரித்திருந்தார். அதன் பின்னர் விக்ராந்த், யோகிபாபுவை வைத்து, ‘தி கில்லர் மேன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார்.

எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் சுப்ரமணியம், சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார் எனத் தகவல். நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.