இதன் அறிகுறி வியர்த்தல், குமட்டல், தலைசுற்றல், வாந்தி வருவது போன்ற நிலை. இந்தச் சமயத்தில் நிழல் தரும் இடங்களில் ஒதுங்கி இளநீர், மோர், லஸ்ஸி, குளிர்ந்த நீர் போன்றவற்றை உடனடியாக அருந்திவிட்டு, அரை மணிநேரம் ஓய்வெடுக்கலாம்.
இதனைக் கவனிக்காமல் மீண்டும் தனது வேலையைச் செய்தார்கள் எனில் அதன்மூலம் Heat Stroke வரும் வாய்ப்புகள் அதிகம்.
சமீபத்தில் தெலங்கானாவில் இவ்வாறு அதிகமாக நிகழ்ந்தது. ஜூன் முதல் வாரம் வரை வெப்பம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் வெளியில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.