விழுப்புரம்: `என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரியுமா?’ – தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

Spread the love

இருப்பினும், என் மனதில் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் மீது வைத்துள்ள மரியாதையையும், பாசத்தையும், நம்பிக்கையையும் யாராலும் நீக்க முடியாது. இந்த முடிவு எடுக்கப்பட்ட சூழ்நிலையை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.

குறிப்பாக, ஒரு பெண்ணாகவும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவளாகவும் நான் மேற்கொண்ட போராட்டங்கள் தலைவர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என்று என் மனதில் கேள்வி எழுகிறது.

விஜய், மோகன்ராஜ்

விஜய், மோகன்ராஜ்

அண்ணன்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மோகன்ராஜ் இருவரும் நல்ல செயல்பாட்டாளர்கள் என்பதை நான் மதிக்கிறேன். ஆனாலும் ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது மனஉளைச்சலையும், வேதனையையும் தருகிறது. ஆனாலும் என் கொள்கைகளிலும், மக்கள் சேவையிலும் எந்த மாற்றமும் இல்லை. தலைவர் அண்ணன் தளபதி விஜய் அவர்கள் எடுத்துரைக்கும் நல்லாட்சி, சமூகநீதி மற்றும் மக்கள் நலப்பாதையில் என் பயணம் என்றும் தொடரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *