ரூ.289 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட ஒரு நிறுவனம், ஏன் இவ்வளவு முடங்கிப் போயிருக்கிறது? நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டம் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று ஏன் ‘வெற்றுக்கூடாக’ நிற்கிறது? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
நமது நாகரிகத்தின் வேர்களைக் கண்டறிய வேண்டிய ஒரு நிறுவனம், தனது அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்பது வரலாற்றுச் சோகம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றக் காரணத்துக்காக, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வியாண்டுகளில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட கல்லூரி செயலற்று கிடக்கிறது என கல்வி ஆர்வலர்கள் நொந்துக்கொள்கின்றனர்.