Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்குவதற்கான பணிகளை சிஎஸ்கே அணி முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு பதிலாக சிஎஸ்கே அணி தரப்பில் சிவம் துபே, கலீல் அஹ்மத் அல்லது ஆயுஷ் மாத்ரே, கலீல் அஹ்மத் ஆகியோரை மும்பை அணிக்கு கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக டிரேட் செய்ய பல்வேறு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் டிரேட் செய்யப்பட்டுள்ளனர். இதன்பின் அடுத்தடுத்து டிரேட் ரகசியங்கள் வெளி வர தொடங்கியுள்ளன.

அந்த வகையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அவரை டிரேட் செய்ய மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவரை ஏலத்தில் விட்டால், தரமான இந்திய வீரர் கிடைப்பாரா என்ற சந்தேகம் மும்பை அணிக்கு உள்ளது.
இதனால் டிரேட் செய்ய முடிவு செய்து கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஹர்திக் பாண்டியாவை வாங்க கேகேஆர் அணி தீவிரமாக இருந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் இணையவே ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியுடன் மும்பை அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுக்க பேசப்பட்டது. ஆனால் மும்பை அணி நிர்வாகம் ஆயுஷ் மாத்ரே மீது ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. ஆனால் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை. அப்படியில்லை என்றால், சிவம் துபே மற்றும் பிரெவிஸ்ஸை கேட்டுள்ளது.
இதற்கும் சிஎஸ்கே நிர்வாகம் தயங்கி இருக்கிறது. இதனால் பிரசாந்த் வீர் விடுவிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு சிஎஸ்கே அணி வந்துள்ளது. அதேபோல் சிவம் துபேவை கொடுக்கவும் முன் வந்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த டிரேட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.