’35 நிமிடங்களுக்கு நீண்ட ‘பரந்தூர்’ விவாதம்; வாயை திறக்காத எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! பின்னணி என்ன? |’35-Minute-Long Parandur Debate; Why Didn’t Opposition Leader Udhayanidhi Speak? – What’s the Background?

Spread the love

இந்த விவாதத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சியினரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் கீர்த்தனா, ஆதவ், நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் எதனால் திட்டம் ரத்து செய்யப்பட்டது என விலக்கி பேசினர். கம்யூனிஸ்ட்டுகள் திட்டம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பேசினர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி “திட்டம் ரத்து செய்யப்படுவதெல்லாம் சரி. ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?’ என முக்கியமான கேள்வியை எழுப்பினார். பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமாரும் இதே கேள்வியை கேட்டார். திமுக சார்பில் தங்கம் தென்னரசுவும் எ.வ.வேலுவும் இந்த விவாதத்தை முன்னெடுத்தனர்.

தங்கம் தென்னரசு பேசுகையில்

தங்கம் தென்னரசு பேசுகையில்

ஒரு கட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் தங்கம் தென்னரசுவுக்கும் இடையே ‘ஜி ஸ்கோயர் மாப்பிள்ளை, லாட்டரி மருமகன்’ என விவாதம் காரசாரமாக சென்றது. பரந்தூர் கிராமம் விமான நிலையம் கட்ட ஏதுவான இடம் கிடையாது என பாய்ண்டுகளை அடுக்க, தங்கம் தென்னரசு எதனால் பர்ந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது என பாய்ண்டுகளை அடுக்கினார். அமளி துமளியாக இந்த விவாதம் நடந்தது. 35 நிமிடங்களுக்கு நீண்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர்கள் காரசாரமாக பேசிய போதும் ரியாக்சனே கொடுக்காமல் இருந்தார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *