40 வயசைக் கடந்தாச்சு… டீ பிரேக்ல பக்கத்து சீட் நண்பர்கூடப் பேசும்போது, அடிமனசுல ஒரு லேசான பதற்றம் வந்துட்டுப் போகுதா? ரிட்டைர்மென்ட் பத்தி அப்பப்போ பேசிக்கிறீங்களா?
‘ரிட்டையர் ஆனதுக்கு அப்புறம் மாசச் சம்பளம் வராதே… அப்புறம் வாழ்க்கை எப்படி ஓடும்? பிள்ளைகளோட படிப்பு, கல்யாணம்னு இருக்குற சேமிப்பெல்லாம் கரைஞ்சுட்டா, நம்ம மெடிக்கல் செலவுக்கு யாரையாச்சும் போய் நிக்க வேண்டியிருக்குமோ?’ — இது ஏதோ உங்களோட தனிப்பட்ட பயம் மட்டும் இல்லீங்க; இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்குற பெரும்பாலான அரசு ஊழியர்கள் மனசுக்குள்ள ஓடுற அதே கவலைதான்!
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. ‘அரசு வேலை… பென்ஷன் (Pension) இருக்கு, GPF இருக்கு’னு நாம நினைச்சுட்டு இருக்கும்போதே, ‘பணவீக்கம்’ நாம சேர்த்து வைக்கிற சேமிப்பை அசால்ட்டா முழுங்கிட்டே இருக்கு.

15 வருஷத்துக்கு முன்னாடி மாசம் ₹2,000-க்கு வாங்குன வீட்டு மளிகை சாமான், இன்னைக்கு ₹6,000-ஐத் தொட்டுடுச்சு. அப்போ இன்னும் 15 வருஷம் கழிச்சு நீங்க ஓய்வுபெறும்போது, அரிசி, பருப்புல இருந்து மருத்துவச் செலவு வரைக்கும் எக்கச்சக்கமா ஏறியிருக்கும் இல்லையா?
வெறும் பழைய காலத்து சேமிப்பு முறைகளை மட்டுமே நம்பியிருந்தா, எதிர்காலத்துல நிம்மதியான தூக்கம் சாத்தியமே இல்லை!
ஆனா, இதுக்கு ஒரு சூப்பரான, புத்திசாலித்தனமான தீர்வு இருக்கு. அதுதான் SIP + SWP மேஜிக் காம்பினேஷன்!
பணத்தை மலையென சேர்க்க ‘SIP’ (Systematic Investment Plan):
இந்திய பரஸ்பர நிதிச் சங்கத்தின் (AMFI) சமீபத்திய தரவுப்படி, இந்தியாவில் மாதாந்திர SIP முதலீடு மட்டுமே ₹31,960 கோடியைத் தாண்டி, 10 கோடிக்கும் அதிகமான கணக்குகள் இயங்கிட்டு வருது. மக்கள் தங்களோட எதிர்காலத்தை உருவாக்கத் தேர்ந்தெடுத்த மிகச்சிறந்த வழி இது.
இப்போ நீங்க சர்வீஸ்ல இருக்கும்போதே, மாசம் ஒரு ₹10000-ஐ பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) ஒழுங்கா முதலீடு செய்யணும். அடுத்த 15 வருஷத்துல இந்த ‘கூட்டு வட்டி’ (Compounding) சக்தி உங்களோட சின்ன முதலீட்டை ₹48 லட்சம் நிதியா (Corpus) மாத்திடும்.

மாதாந்திர ‘சுய ஓய்வூதியத்திற்கு’ ‘SWP’ (Systematic Withdrawal Plan):
ரிட்டையர் ஆனதுக்கு அப்புறம், சேர்த்து வச்ச அந்த ₹48 லட்சம் நிதியைப் பாதுகாப்பான திட்டங்களுக்கு மாத்தி, SWP மூலமா மாசம் மாசம் ₹25000 உங்களோட 2வது ஓய்வூதியத்தை நீங்களே எடுத்துக்கலாம்.
மாசமானா முதல் தேதியே உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்குப் பணம் ‘டங்’னு வரவு வைக்கப்படும்! இதுல செம விஷயம் என்னன்னா… நீங்க மாசம் மாசம் செலவுக்கு பணம் எடுத்தாலும், உள்ள இருக்குற மிச்ச அசல் அது பாட்டுக்கு வளர்ந்துகிட்டே இருக்கும்.
இந்த மாஸ்டர் பிளானை செஞ்சா உங்க வாழ்க்கை எப்படி மாறும்?
-
பணிஓய்வு நாளில் எந்தக் கடனும் இல்லாம, கௌரவமா, தலைநிமிர்ந்து நடந்து வரலாம்.
-
மாதாந்திரச் செலவுக்கோ, திடீர் மருத்துவச் தேவைகளுக்கோ பிள்ளைகளையோ, சொந்தங்களையோ எதிர்நோக்கி நிக்க வேண்டிய கட்டாயமே இருக்காது.
-
“என் ஓய்வுக்காலம் முழுக்க முழுக்க என் கைக்குள்ள!”ங்கிற சுயமரியாதையோடும், நிம்மதியான மனநிலையோடும் பேரக் குழந்தைகளோட சந்தோஷமா காலத்தைக் கழிப்பீர்கள்.
உங்க நிதிச் சுதந்திரத்தையும், நிம்மதியான எதிர்காலத்தையும் இப்போதே திட்டமிடப் போறீங்களா? உங்களுக்கான பிரத்யேக நேரலை வழிகாட்டுதல் இதோ…
‘SIP + SWP மூலம் நிறைவான பணிஓய்வு’ – திட்டமிடுவது எப்படி? – அரசு ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
முதலீட்டில் பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் கொடுக்கும் ‘SIP + SWP’ திட்டமிடல்
நாள்: ஆகஸ்ட் 19, 2026, புதன்
நேரம்: மாலை 07 – 8:30 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: டீம் லாபம்
100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.
முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-aug19-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug19_2026