அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
தற்போது உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸை தாண்டும். இதன் காரணமாக முந்தைய ‘எல்நினோ’வை விட, சக்திவாய்ந்த ‘சூப்பர் எல்நினோ’, 2026-ன் பிற்பகுதியில் நிகழும்.
இதனால் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என வாஷிங்டன் பல்கலை ஆய்வு எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் ‘சூப்பர் எல் நினோ’ பாதிப்புகளைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

உணவு உற்பத்தி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ” ‘சூப்பர் எல்நினோ’-வால் உருவாக இருக்கும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் முழுமையாகத் தயாராக வேண்டும்.
ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் 1876-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உணவு உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தது.
அதனால், பஞ்சம் ஏற்பட்டபோது நிறைய பேர் உயிரிழந்தார்கள். ஆனால், இன்று நமது உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது.