கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின்படி, 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.