‘அது ஒரு கனா காலம்’ நடித்த போது சின்னப் பையனாக இருந்தேன். தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என்றார்கள். நானும் ஆசையோடு இருந்தேன். ஆனால், விருது கிடைக்கவில்லை. ‘புதுப்பேட்டை’க்கு விருது கிடைக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். அப்போதும் கிடைக்கவில்லை.
‘மயக்கம் என்ன’, ‘3’, ‘மரியான்’, ‘ராஞ்சனா’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’ என பல படங்களுக்கும் விருது கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் யாரும் பேசவில்லை.
இன்றைக்கு 90% பேர் விமர்சிக்கின்றனர். அன்றைக்கு 10% பேர் கூட எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தட்டி விடாதீர்கள்…தட்டிக் கொடுங்கள். அஜித் சார் சொன்ன மாதிரி தான் ‘நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குற வரைக்கும் உன்னைய யாராலையும் தோற்கடிக்க முடியாது” என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ்.