Anbe Diana:“ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" – சசிகுமார்

Spread the love

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து ‘அன்பே டயானா’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்
அன்பே டயானா பாரி இளவழகன் – யுவராஜ்

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான சசிகுமார், “ஜூலை 17, 2026 அன்று வெளியாகவிருக்கும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போதே, படம் எவ்வளவு கலர்ஃபுல்லாகவும், பெரிய வெற்றிப் படமாகவும் அமையப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகனின் முந்தைய படமான ‘ஜமா’ ஒரு அருமையான படம். அதில் பெண் வேடமிட்டு பாரி ஆடிய நடனமும், கைகளை ஊன்றாமல் சட்டென்று அவர் கீழே அமர்ந்த அந்த ஆட்டமும் அசாத்தியமானது.

பலரும் அந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கத் தவறிவிட்டனர். கலைநயம் மிக்க அந்தப் படம் பெரிய கமர்சியல் வெற்றியைப் பெற்றிருந்தால் பாரி வேறு தளத்திற்குச் சென்றிருப்பார். இப்போது அவர் ‘அன்பே டயானா’ என்ற ஒரு அழகான, கலகலப்பான குடும்பத் திரைப்படத்தைத் தந்துள்ளார்.

ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில் இந்த கமர்சியல் காமெடி படம் பாரிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

வில்லன் பிம்பத்தில் இருந்து மாறி ஜாலியான தந்தையாக நடித்துள்ள சேத்தன், நடனத்தில் அசத்தியுள்ள கதாநாயகி ரம்யா ரங்கநாதன், இசையமைப்பாளர் பரத் சங்கர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சுதாகர் இருந்தால்தான் காமெடி பண்ணுவியா கோபி? மேடையில் ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டுப் போற, நீ எப்போதுமே மேடையில் எங்களை என்டர்டெய்ன் செய்ய வேண்டும், சீரியஸாக இருக்கக் கூடாது” எனக் கிண்டலாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் செட் பிராப்பர்ட்டி போல எல்லாப் படங்களிலும் நடித்து வரும் சுதர்சனின் வளர்ச்சியையும், எழுத்தாளர் சரவணனின் புத்தக வெளியீட்டிற்கு பணம் வாங்காமல் உதவிய அவரது நற்பண்பையும் மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *