Annamalai: “ஐபிஎஸ் டூ தனிக்கட்சித் தலைவர் வரை” – அண்ணாமலை கடந்து வந்த பாதை!

Spread the love

ஐ.பி.எஸ் வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்திய சாதாரண விவசாயி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து அவரின் அரசியல் தொடர்பான கருத்துகள் மூலம் தனக்கென செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார். அவரின் அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகள், சலசலப்புகள் என வலம் வந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதற்குப்பிறகு மெல்ல மெல்ல லைம் லைட்டிருலிருந்து வெளியேறிய அண்ணாமலை, கடந்த சில வாரங்களாக பா.ஜ.க அரசுக்கு எதிரான சிலக் கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அப்போதே அண்ணாமலை தனிக்கட்சித் தொடங்கப்போவதாக தகவல்கள் கசிந்தன. அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யாத அண்ணாமலை, அவரின் பிறந்தநாளான நேற்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை டெல்லிச் சென்று சந்தித்தார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் பா.ஜ.க தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பா.ஜ.க தலைமை தெரிவித்திருந்தது.

இதனிடையே இன்று சமூக வலைதள நேரலையில் வந்த அண்ணாமலை, தான் ஏற்கனவே தொடங்கிய we the leaders அமைப்பு மூலம் புதிய பயணத்தை தொடங்க இருப்பதாகவும், பின்னர் அது தனிக் கட்சியாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, அண்ணாமலை கடந்து வந்தப் பாதையை சுருக்கமாக பார்க்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *