கடன் பிரச்னையால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்களா… 12 லக்னக்காரர்களுக்கும் எளிய பரிகாரங்கள்! | Burdened by Debt? Easy Astrological Remedies for All 12 Lagnas

Spread the love

மேஷ லக்னம்:

இதன் அதிபதி செவ்வாய். இதற்கு ஆறாம் பாவம் கன்னி. புதன் கன்னிக்கு அதிபதி. செவ்வாயும் புதனும் பகை ராசிகள். ஆகவே, ஜாதகத்தில் புதன் சூரியனுடன் இருப்பது நன்மையைத் தரும். மாறாக வேறு எப்படி இருந்தாலும் சிறு சிறு கடன்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட கடன் குறையும்.

ரிஷப லக்னம்:

சுக்கிரனை அதிபதியாகக்கொண்ட ரிஷப லக்னத்துக்கு 6-ம் வீடு துலாம். துலாத்துக்கு அதிபதியும் சுக்கிரன்தான். சூரியனோடு சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் குருவோடு சேர்ந்திருந்தாலும் கடன் தொல்லை தீராது. இல்லையெனில் பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்ரஹோரையில் (காலை அல்லது இரவு ) மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் கடன் சுமை படிப்படியாகக் குறையும்.

மிதுன லக்னம்:

புதனை அதிபதியாகக்கொண்ட மிதுன லக்னத்துக்கு 6-ம் இடமான விருச்சிகம்; அதிபதி செவ்வாய். இவர் மகரம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் பிரச்னை நிறைய உண்டு.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு. ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சமர்ப்பியுங்கள். வெற்றிலை மாலை சாத்துவதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.

கடக லக்னம் :

சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடகம். இதற்கு ஆறாம் இடத்தின் அதிபதி குரு. இவர் மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் தொல்லைகள் ஏற்படும்.

பரிகாரம்:

திங்கள்கிழமைகளில் ஏழுமலையானை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். நெய் தீபம் சிறப்பு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நின்றகோலப் பெருமாளை தரிசனம் செய்வது அவசியம்.

சிம்ம லக்னம்:

சூரியனின் ஆதிக்கம் கொண்ட லக்னம் இது. இந்த லக்னத்துக்கு 6-ம் இடமான மகர ராசிக்கு அதிபதி சனி. இவர் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால், கடன்தொல்லை அதிகமிருக்கும்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நீராடிவிட்டு உதய வேளைக்கு முன்பாக சூரிய பகவானுக்கு 3 முறை அர்க்கியம் விட வேண்டும். கோதுமையில் சர்க்கரைப்பொங்கல் செய்து சமர்ப்பணம் செய்துவர கடன் குறையும்.

கன்னி லக்னம் :

புதனை அதிபதியாகக் கொண்ட லக்னம். கன்னிக்கு 6-ம் இடமான கும்ப ராசியின் அதிபதி சனி. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் கடன் சுமை ஏற்படும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டு நெய்தீபம் இடுவது சிறப்பு. மேலும் தாயாருக்கு வாசனை மலர்களை சமர்ப்பித்துவர சகல நன்மைகளும் கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *