Asia Cup: ACC தலைவர் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்தியப் பெண்கள் அணி; என்ன நடந்தது? | India Women’s Team Refuse Asia Cup Trophy From Mohsin Naqvi

Spread the love

இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார் கூறியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

“இந்தியா அதிகாரப்பூர்வமாக Asia Cup சாம்பியன். கோப்பை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு அது முக்கியமில்லை. நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறாதது BCCI-யின் நிலைப்பாடு. இதுகுறித்து எங்களால் எதுவும் கூற முடியாது.”

கடந்த ஆண்டும் இதே நிலை!

இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இந்திய ஆண்கள் அணியும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து Asia Cup கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெற மறுத்திருந்தது.

அப்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பை இல்லாமலேயே மேடையில் வெற்றியைக் கொண்டாடியது. அந்த Asia Cup கோப்பை பின்னர் ACC அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை பெண்கள் அணி அதையும் தாண்டி, பரிசளிப்பு நிகழ்ச்சிக்கே வராமல் இருந்திருக்கிறது.

இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட பரிசு

இதற்கிடையே, இலங்கை அணியின் வீராங்கனைகள் மற்றும் support staff-க்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இலங்கை அணியின் runner-up பரிசுத் தொகைக்கான காசோலையையும் மொஹ்சின் நக்வி வழங்கினார்.

இலங்கை கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு விருது வழங்கிய பிறகு நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் கடந்த ஆண்டைப் போல இந்த முறை கோப்பையை எடுத்துச் செல்லவில்லை.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் தொடரும் நிலையில், இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் சந்திக்கும்போது கைகுலுக்காத நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *