‘எந்த இரண்டு நபர்களுக்கு கேப்டன் ஆக தகுதியே கிடையாது. கும்பல்ல கோயிந்த போடற ஆள். சொல்லுங்க” என்று அடுத்த கேள்வியை விசே கேட்க “முனியம்மாள், மணிவண்ணன் போன்றவர்கள் செய்யும் ராவடிகளை மக்கள் அடுக்கினார்கள். “அவங்க நல்லா பேசறாங்கன்னா, எப்படி கும்பல்ல கோயிந்தா போடறதா சொல்வீங்க.. யோசியுங்க” என்றார் விசே. இதன் மூலம் இன்னமும் ஆட்டத்திற்குள் வராமல் அமைதியாகவே இருக்கும் மிக்சர் பார்ட்டிகளை குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது.
இந்த முதல் வாரத்தைப் பொறுத்தவரை வினோத், முனியம்மாள், ஜேசன், ஷாமா, ஷாதிகா, மணிவண்ணன், அன்சர் போன்றவர்கள் சிறப்பாக வெளிப்பட்டார்கள். முகேஷ், லஷ்மிபிரியா, தன்யா, ராகவ், அஷ்மிதா, சாந்தினி போன்றவர்கள் இப்போதுதான் முதலடி எடுத்து வைக்கிறார்கள். குமரன், ஜாவித், பிருத்வி, அவினாஷ் போன்றவர்கள் இன்னமும் வெளிப்படவே இல்லை.
பிரபலங்கள் vs சாமானியர்கள் என்று இரு பிரிவாக அமர வைத்தார் விசே. ஏற்கெனவே சற்று பிரபலங்களாக இருக்கிறவர்களுக்கு அதன் காரணமாகவே சற்று வாக்குகள் கிடைக்கும். ஆனால் மக்களுக்கு பரிச்சயமே இல்லாத முனியம்மாள், ஜேசன், மணிவண்ணன், ஷாமா போன்றவர்கள் எப்படி கலக்குகிறார்கள், பார்த்தீர்களா என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். அதிலும் கிராமத்திலிருந்து வந்திருக்கும் முனியம்மாள், நகரத்து போட்டியாளர்களுக்கு இத்தனை சவாலாக இருப்பது சுவாரசியம்.