FCRA மசோதா: மீண்டும் கையில் எடுத்த மத்திய அரசு! எதிர்ப்பு எழுவது ஏன்?

Spread the love

நன்கொடைகளை குறிப்பிட்ட காலத்தில் செலவு செய்ய வேண்டும்

முழுமையாகப் பதிவு செய்யப்படாத, ஆனால் ஒருமுறை வழங்கப்படும் “முன் அனுமதி” வழிமுறையின் மூலம் பெறப்படும் வெளி நாட்டு நன்கொடைகள் இந்த மசோதாவின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் இச்சட்டத்தின் கீழ், தேர்தல் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் போன்றோர் வெளிநாட்டுப் நன்கொடைகளைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படியோ அல்லது அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படியோ செயல்படுவது சட்ட மீறலாகக் கருதப்பட்டு, அதற்காக ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதமும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வரைவு, அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தை ஓராண்டாகக் குறைக்கிறது. மேலும், இச்சட்டத்தின் கீழ் வரும்போது குற்றத்திற்காக விசாரணையைத் தொடங்க மத்திய அரசின் முன் அனுமதி தேவை என்றும் இது குறிப்பிடுகிறது.

இதன் நிலைத்தன்மையை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்

இப்படிபட்ட சூழலில்தான் இது தற்போது கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் இதுவரை தொண்டு நிறுவனங்கள் உட்பட சுமார் 16,000 அமைப்புகள் பதிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி நன்கொடைகள் அவற்றின் மூலம் பெறப்படுகின்றன. இதில் சொல்லப்பட்ட அந்த ‘அதிகார அமைப்பிற்கு’ வரம்பு மீறிய சக்திகளை கொடுத்துள்ளதாகவும்; விண்ணப்பங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட காலம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு அதனை காரணமாக காட்டி சொத்துக்கள் பறிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இம்மசோதா குறித்து எதிர்வினை ஆற்றப்படுகிறது. அந்த மசோதாவைத் தொடர்ந்து முன்னெடுக்கக் கூடாது என்று அது பரிந்துரைக்கலாம்; ஆனால், அந்தப் பரிந்துரை ஒரு ‘வீட்டோ’ (தடுப்பு) அதிகாரம் ஆகாது. அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதா, திருத்துவதா அல்லது நிராகரிப்பதா என்பதை இறுதியில் நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *