இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது.
அந்த மாற்றங்கள்
> இதற்கு முன்பு…
1. சம்பளம், ஒரு வீட்டு வாடகை, இதர வருமானங்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள்,
2. பிரிவு 112A-ன் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) கொண்டவர்கள்

3. 5,000 ரூபாய் வரை விவசாய வருமானம் உள்ள இந்தியக் குடிமக்கள் மட்டுமே ITR-1 படிவத்தை பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், இனி அப்படி இல்லை. இனிமேல் இரண்டு வீடுகளை சொத்தாக வைத்திருபவர்களும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஐ.டி.ஆர்-1 படிவத்தில் தாக்கல் செய்யலாம்.
இனி இரண்டு வீடுகளைச் சொத்தாக வைத்திருப்பவர்களும் ஐ.டி.ஆர்-1, 4 படிவத்தில் கணக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், இனி சொத்தின் கூட்டுரிமை (Co-ownership), வாடகைதாரர்களின் விவரங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.