கேரளாவில் கடந்த மாதம் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் வெற்றிப் புயல் கேரளத்தில் மையம்கொண்டுள்ளது எனக்கூறும் அளவுக்கு அக்கட்சி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அதே சமயம் தற்போதைய நிலவரப்படி 89 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் முன்னிலை வகித்து வருகிறது.
சி.பி.எம் கூட்டணியான எல்.டி.எஃப் 48 தொகுதிகளிலும், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அமைச்சர்கள் பெரும்பாலானோர் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சி.பி.எம் கோட்டையாகக் கருதப்படும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் ராஜன், பாலகோபால், சஜி செறியான் உள்ளிட்ட சிலர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, வாசவன், பிந்து உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.