கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்னிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 ஆக உள்ள நிலையில், தேர்தலில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 பேர் வாக்களித்தனர். இதனால் வாக்கு சதவீதம் 87.08 ஆக உள்ளது.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்னிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கிணத்துக்கடவு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.
முதல் சுற்றில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் 3,385 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் 3,052 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் 2,597 வாக்குகளும் பெற்றனர்.
இரண்டாவது சுற்றில் விக்னேஷ் 7,361, செ.தாமோதரன் 5,636, சபரி கார்த்த்கேயன் 5,191 வாக்குகளும் பெற்றனர். மூன்றாவது சுற்றில் விக்னேஷ் 11,606, செ.தாமோதரன் 8,470, சபரி கார்த்த்கேயன் 8,026 வாக்குகளும் பெற்றனர்.

நான்காவது சுற்றில் விக்னேஷ் 15,754 வாக்குகளும், செ.தாமோதரன் 11,008, சபரி கார்த்திகேயன் 11,117 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் நான்காவது சுற்று முடிவில் சபரி கார்த்திகேயனை விட விக்னேஷ் 4,637 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.