Mettur dam: 4 டிஐஜிக்கள், 4 ஆயிரம் போலீஸ்! சம்பா சாகுபடிக்கு நாளை மேட்டூர் அணையை திறக்கும் முதல்வர் | cm joseph vijay opening mettur dam tomorrow for delta samba rice cultivation

Spread the love

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் மற்றும் வேளாண் பயன்பாடுகளுக்குத் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றுப்படுகையில் சுமார் 15 லட்சம் ஏக்கருக்கு மேல் இந்த அணைக்கட்டு மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்கான தண்ணீரை ஜூன் மாதம் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 90 அடியை எட்டியிருக்கிறது. சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதல்வர் ஜோசப் விஜய் நாளை காலை திறந்து வைக்க உள்ளார்.

மேட்டூர் அணையில் காவல்துறையினர்

மேட்டூர் அணையில் காவல்துறையினர்

செப்டம்பர் முதல் நாளான நாளையிலிருந்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் அணைக்கட்டு வரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசுச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு ஐ‌.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 எஸ்.பி, 15 கூடுதல் எஸ்.பி, 35 துணை எஸ்.பி, 4 ஆயிரம் போலீஸார் எனப் பெரும் படையே முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறப்பதற்கான விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *