Modi Thanks Citizens for Cutting Fuel Use, Postponing Gold Purchases Amid West Asia Crisis / ‘மக்களின் இந்த பொறுப்புணர்வு.!’ பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதையும், பெட்ரோல் செலவையும் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவருடைய இந்த வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, இந்திய மக்கள் காட்டியுள்ள அற்புதமான ஒத்துழைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி “மன் கி பாத்’ (Mann Ki Baat) வானொலி உரையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். நாட்டின் நலனைக் கருதி இந்தியப் பொதுமக்கள் காட்டியுள்ள இந்த பொறுப்புணர்வை அவர் பாராட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, எரிபொருள் பயன்பாட்டைச் சேமிப்பதற்காக அலுவலகம் செல்பவர்கள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளும் ‘கார் பூலிங்’ (Carpooling) முறையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *