Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' – குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

Spread the love

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த ‘தொடக்கம்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தது.

நடிகர் மோகன்லாலின் பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவருக்கும் தாய்மொழியான மலையாளம் சரளமாகப் பேச வராதது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா மோகன்லால் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Mohanlal - Vismaya Mohanlal
Mohanlal – Vismaya Mohanlal

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரணவ் ஆறாம் வகுப்பு படிக்கும்போதும், விஸ்மயா மூன்றாம் வகுப்பு படிக்கும்போதும் போர்டிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், அவர்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய சூழல் இருந்தது.

அவர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு வரும்போதும் நான் அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவேன். அது முற்றிலும் என்னுடைய தவறுதான். என்னுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தால், என் தந்தை பாதி தமிழும் பாதி மலையாளமும் பேசுபவர்.

என் அம்மா முழுமையான மலையாளத்தைச் சேர்ந்தவர். அதனால் நாங்கள் வீட்டில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என கலந்துதான் பேசுவோம். மேலும், மோகன்லால் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை.

அவர்களின் உறவினர் குழந்தைகளும் மெட்ராஸில் பிறந்து வளர்ந்ததால் அவர்களும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

இதனால்தான் வளர வளர அவர்களுக்கு மலையாளத்துடனான தொடர்பு குறைந்துவிட்டது. இப்போது மாயாவுக்கு மலையாளம் புரியும், பேசவும் தெரியும்.

Mohanlal - Suchithra
Mohanlal – Suchithra

ஆனால், பேசுவதற்கு ஒரு தயக்கமும் தன்னம்பிக்கைக் குறைபாடும் இருக்கிறது. தவிர, என் பேச்சிலேயே தமிழ் கலந்த உச்சரிப்பு இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள்.

பிரணவ் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு, செட்டில் பலருடன் பேசிப் பேசி இப்போது அவரது மலையாளம் நன்றாக முன்னேறியிருக்கிறது. ஆனால் மாயா, ஒரு கதையைக் கேட்டால் வசனங்களைக் கற்றுக்கொள்ளவே ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் அவகாசம் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் ஸ்கிரிப்ட் படித்துப் புரிந்துகொள்கிறாள். அதனால்தான் அவள் புதுப் படங்களில் கமிட் ஆக கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறாள்” என்று பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *