நான் கூட எனது வாழ்க்கை மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நான் எப்போதும் முயற்சிப்பேன். ஒரு மனிதனாகவும், ஒரு நடிகனாகவும் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். எனது தவறுகளை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நான் எதையும் வெளிப்படையாகப் பேசும் மனிதன். நான் எதை நினைக்கிறேனோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். பல ஆண்டுகளாக, மற்ற எல்லாவற்றையும் விட எனது வேலைக்கே முன்னுரிமை அளித்தேன்.
நான் ஏற்கனவே திருத்திக் கொள்ளத் தொடங்கிய ஒரு தவறு என்னவென்றால், எனது நெருக்கமானவர்களுக்கும் உறவுகளுக்கும் போதிய நேரத்தை வழங்காததுதான். நான் 30-35 ஆண்டுகளாக வேலை, திரைப்படம் மற்றும் நடிப்பிற்கு மட்டுமே அடிமையாக இருந்தேன். கோவிட் பெருந்தொற்று காலத்தில் எனது வாழ்க்கையை மீண்டும் ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை.
அப்போதுதான் நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன் என்பதையும், இந்த நேரம் மீண்டும் வராது என்பதையும் உணர்ந்தேன்,”என்று அவர் கூறினார்.” ஆமீர் கான் தனது முதல் மனைவி ரீதா தத்தாவை 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2005ம் ஆண்டு தயாரிப்பாளர் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.