Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்…" – நடிகர் அங்குர் ரத்தன்

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளத்தினால் மக்கள் தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு

இந்நிலையில் இந்தப் பேரழிவு நடப்பதற்கு வெறும் 16 மணி நேரத்திற்கு முன்பாகத்தான், நடிகர் அங்குர் ரத்தனும் அவரது குடும்பத்தினரும் வெள்ளம் அடித்துச் சென்ற பகுதியில் நின்று புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட பயணத் தொலைவில் இருந்த ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கின்றனர். வெள்ளம் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு,பாதுகாப்பான நகரத்திற்குச் சென்றதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் அங்குர் ரத்தன், “கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தோம். நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளம் வந்த அந்த இடத்தில்தான் இருந்தோம் என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

அங்குர் ரத்தன்
அங்குர் ரத்தன்

நானும், என் மனைவியும் அங்கு நின்றுதான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட தொலைவில்தான் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்தது.

எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் உயிர்தப்பிவிட்டோம். உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *