Odisa Migrant worker arrested for secretly growing a cannabis plant among vegetables – காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – வடமாநில தொழிலாளி சிக்கியது எப்படி?

Spread the love

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில் தனது மனைவியுடன் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இதனிடையே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மாதாபெனந்தா ஜெனா, தான் குடியிருக்கும் வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் தங்களுக்குத் தேவையான காய்கறி செடிகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது சொந்தப் பயன்பாட்டிற்காக புகைப்பதற்காக இரண்டு கஞ்சா செடிகளையும் ரகசியமாக நட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்து உள்ளார்.

மாதாபெனந்தா ஜெனா

மாதாபெனந்தா ஜெனா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *