மதுரை சிம்மக்கல் பகுதியில் இயங்கி வரும் ராகுல் இசைக்கருவியகம், நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியத்துடன் தோல் இசைக்கருவிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தற்போது மூன்று தலைமுறைகளாக பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிப்பைத் தொடர்ந்து வருகிறது. இதன் உரிமையாளராக மரிய சகாய பிரிட்டோ செயல்பட்டு வருகிறார்.
இங்கு பம்பை, உறுமி, தவுலு, மிருதங்கம், கஞ்சிரா, குடுக்கை, தபேலா, தப்பு, தமுக்கு, தண்டை, சிவவாக்கியம் உள்ளிட்ட 16 வகையான தோல் இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. சினிமா மற்றும் இசைப் பதிவுக் கூடங்களுக்குத் தேவையான இசைக்கருவிகள், அவற்றின் உதிரிப்பாகங்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
கருவிகள் தயாரிப்பதற்குத் தேவையான புதிய தோல்கள் ஆம்பூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆட்டுத்தோல் மற்றும் எருமைக் கன்றின் தோல் உள்ளிட்ட தரமான தோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையிலும் இசைக்கருவிகள் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன.