"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

Spread the love

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.

தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகைச்செல்வன், “ஒரு உப்பை போல சுத்தமான தலைவராக இருப்பதை நான் பார்த்தேன். வியந்துபோனேன். மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஊழல், லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு ஆட்சி பீடுநடை போடுவதை எண்ணிப்பார்க்கையிலே மனமகிழ்ச்சியை தருகிறது. அதிமுகவில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து கொண்டிருந்தால் இபிஎஸ் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். இபிஎஸ் குறித்து குறை சொல்ல எனக்கு விருப்பமில்லை. Right Party, Wrong Leader.

எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய், தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் இருக்கிறார். தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால் அவரை தேடி வந்து இணைந்திருக்கிறோம்.

அதிமுகவில் இருந்து மனவேதனையுடன் பிரிந்து வந்துள்ளோம். விஜய் எங்களிடம் எளிமையாக, அன்பாக, பாசமாக பேசினார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

அதிமுகவில் சரியான தலைமை இல்லாத நிலையில் அங்கிருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்திருக்கிறோம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *