டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பார் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களும் தொடர்ந்து இயங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, தனியார் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், பழைய மதுபான பாட்டில்கள் கொள்முதல், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை
அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை டிவிஏசி பதிவு செய்து, தற்போது சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், பாட்டில் விநியோகம் மற்றும் மதுபான பிராண்ட் ஒப்புதல்கள் உள்ளிட்ட செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பின்னணி கொண்ட நபர்கள் இணைந்து கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக FIR-ல் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சேகரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.!