அதிகாலையில் ஏழரையை கூட்டிய அமெரிக்கா.. அசராமல் பதிலடி கொடுத்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் | Iran’s IRGC warns ships after targeting 3 tankers in Hormuz, 3 US-affiliated vessels

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: இன்று காலை, ஈரானின் மிகப்பெரிய 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தொடர்புடைய கப்பல்களை தாக்கியிருப்பதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

நாங்கள் சும்மா ரோந்துதான் போயிட்டு இருந்தோம்.. செவனேனு போன எங்க மேல ஈரானின் IRGC ராணுவம் ஏவுகணைகளை வீசி அட்டாக் செய்தது. இதற்கு பதிலடியாக ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களான M/T Downy, M/T Strark1 மற்றும் M/T Kylo ஆகியவற்றை தாக்கிய அழித்திருப்பதாக அமெரிக்கா நியாயம் பேசியிருக்கிறது.

Iran

ஆனால் நாங்கள் ஏன் சும்மா போகும் கப்பல் மீது ஏவுகணை தாக்குதலை நடதப்போகிறோம்? என்று ஈரான் கேள்வி எழுப்பியிருக்கிறது. மட்டுமல்லாது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்காவுடன் தொடர்புடைய 3 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது IRGC தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே அமெரிக்காவின் தேவையில்லாத வேலையால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. சென்னை அண்ணா நகரில் எத்தனால் கலக்காத சுத்தமான ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.117-118 வரை விற்பனையாகிறது. இதற்கு காரணம் அமெரிக்காதான்.

அமெரிக்காவின் தேவையில்லாத இந்த போர் காரணமாக.. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கடல்வழி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக மத்திய கிழக்கிலிருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய்யின் அளவு இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில் 39% குறைந்திருக்கிறது.

இப்படியே போனால் எந்த தரப்புக்கும் லாபம் இருக்காது என்பதை உணர்ந்த ஈரான், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, நேற்று துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். பதற்றத்தை தணிப்பது அமைதியை ஏற்படுத்துவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை தீர்ப்பது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனை போதாது என்று, லெபனானில் இஸ்ரேல்-ஹெஸ்புல்லா மோதலும் தீவிரமடைந்திருக்கிறது. தெற்கு லெபானனில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிய படைகளை நோக்கி இரண்டு வெடிமருந்து ட்ரோன்களை ஏவி தாக்கியிருக்கின்றனர். இதில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம், தெற்கு லெபனானில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *