அத்தை மண்டையை போட வேண்டும்.. 20 ரூபாய் நோட்டில் எழுதி.. கோயில் உண்டியலில் போட்ட பாசக்கார பக்தர்! | Rs 20 Note with ‘Death Wish for Aunt’ Found inside Andhra Temple Hundi

Spread the love

India

oi-Halley Karthik

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் உண்டியலில், தனது அத்தை இறக்க வேண்டும் என்று எழுதப்பட்ட 20 ரூபாய் நோட்டு கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரு உலகம் நல்லா இருக்கணும், அக்கம் பக்கத்தினர் எந்த குறையும் இல்லாம வாழனும், நாடு செழிக்கனும்.. இப்படித்தான் நம்ம வேண்டுதல் இருக்கும். சிலர், எக்ஸாம்ல பாஸ் ஆகனும், குடிகார அப்பனுக்கு நல்ல புத்தி வரனும், புருஷன் ஒழுங்கா சம்பாதிக்கனும், வாழ்க்கையில முன்னேறனும்.. இப்படி கூட வேண்டுவார்கள்.

Rs 20 Note with Death Wish for Aunt

ஆனால், ஒரு வித்தியாசமான பக்தர் தன்னுடைய அத்தை விரைவில் சாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதலை 20 ரூபாய் நோட்டில் எழுதி உண்டியலில் போட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவில் உள்ள ஒரு பிரபல கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஊழியர்கள் ஒரு 20 ரூபாய் நோட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த நோட்டில் தெலுங்கு மொழியில், “எனது அத்தை விரைவில் இறக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இதில் இந்த 20 ரூபாய் நோட்டில் விவகாரமான வேண்டுதலை எழுதியது யார் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும்? யாராவது உள்ளூர் பக்தர்தான் இந்த வேண்டுதலை வைத்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் அத்தைக்காக இந்த வேண்டுதலை வைத்தாரா? அல்லது.. மாமியாரை அத்தை என்று குறிப்பிட்டு இந்த வேண்டுதலை வைத்தாரா? என்று நெட்டிசன்கள் 20 ரூாபய் நோட்டின் படத்தை ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது சரி, ஊரு உலகத்துல.. மாமியார் கொடுமையால்தான் நிறைய குடும்பங்கள் பிரிகிறது என்று திருமணமானவர்கள் கூறுகிறார்கள். உங்கள் மாமியார் எப்படிப்பட்டவர்? என்று கமெண்ட்டில் சொல்லிட்டு போங்க!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *