குறிப்பாக, சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சாண்டார் கோயிலில் ரூ.4.76 கோடியிலும், டோல்கேட்டில் 58 லட்சத்திலும், கூத்துாரில் ரூ.3.63 கோடியிலும், பளூரில் ரூ.82 லட்சத்திலும், பனமங்கலத்தில் ரூ.1 கோடியிலும், வில்வகுடியில் ரூ.29 லட்சத்திலும், வெங்கங்குடியில் ரூ.2.13 கோடியிலும், நங்கமலசத்திரத்தில் ரூ.10 லட்சத்திலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தெற்கு ஈச்சம்பட்டியில் ரூ.80 லட்சம், வடக்கு ஈச்சம்பட்டியில் ரூ.1.13 கோடியிலும், சக்திநகரில் ரூ.1.15 கோடியிலும், இனாம்கல்பாளையத்தில் ரூ.4.38 கோடியிலும், அக்கரைப்பட்டியில் ரூ.1.06 கோடியிலும், தேவிமங்கலத்தில் ரூ.4.76 கோடியிலும், தெற்கு தத்தமங்கலத்தில் ரூ.1.08 கோடியிலும், வடக்கு தத்தமங்கலத்தில் ரூ.2.43 கோடியிலும், தெற்குதளுதாளப்பட்டியில் ரூ.1.94 கோடியிலும், வடக்கு தளுதாளப்பட்டியில் ரூ.25 லட்சத்திலும், பாலையூரில் ரூ.15.20 கோடியிலும், ஸ்ரீபுரம்புதுாரில் ரூ,.2.53 கோடியிலும், கரியமாணிக்கத்தில் ரூ.2.47 கோடியிலும், கன்னியாகுடியில் ரூ.3.15 கோடியிலும், ஆய்குடியில் ரூ.1.76 கோடியிலும், மேல, கீழ வங்காரத்தில் ரூ.1.08 கோடியிலும் என இப்பகுதியில் மட்டும் கிராமத்திற்கு ரூ.1 கோடிக்கு குறைவில்லாமல் வளர்ச்சித் திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

இதில், 10,000 மக்கள் பயனடைந்திருப்பார்கள். திண்ணகோணம் ஊராட்சி, சுதந்திரம் அடைந்ததிலிருந்து பேருந்து வசதி இல்லாத கருப்பு கோவில் கொட்டத்திற்கு பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளோம். இது போன்று பல புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளோம். அரசு கலைக் கல்லூரிக்காக சட்டமன்றத்தில் இருமுறை பேசியுள்ளேன். ஊருக்கு அவுட்டரில் பேருந்து நிலையம் அமைக்க முயல்வதால், தாமதமாகிறது.
பிச்சாண்டார் கோவிலில் சப்வே அமைப்பதற்காக ரயில்வே அதிகாரிகளுக்கு தனியாகவும், எம்.பி மூலமும் கடிதம் கொடுத்துள்ளோம். மீண்டும் உதிக்கப்போகும் திராவிட மாடல் ஆட்சியில் அந்த திட்டங்கள் யாவும் நிறைவேற்றப்படும்.