கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு ஈரான் தரப்பு மட்டுமே சென்றிருந்தது. அமெரிக்கா கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டது.
இஸ்லாமாபாத்திற்கு ஈரான் சார்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்றிருந்தார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் ஈரான் பேசியவை…
1. முதலில் ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான தாக்குதல்கள் நிற்க வேண்டும். எதிர்காலத்திலும் எந்தத் தாக்குதலும் நடக்காது என்கிற உத்தரவாதம் வேண்டும்.

2. அது நடந்தால், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் நிர்வாகம் பற்றி பேசப்படும்.
3. அதுவும் நடந்துவிட்டால், கடைசியாக ஈரானின் அணு ஆயுதம் குறித்து கலந்தாலோசிக்கலாம்.
இவற்றை அமெரிக்காவிடம் தெரிவிக்கும் படி, பாகிஸ்தானிடம் ஈரான் கூறியிருக்கிறது.
இஸ்லாமாபாத் பயணத்திற்கு அடுத்து அராக்சி சென்றிறங்கிய நாடு, “ரஷ்யா’.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இழுப்பறியில் இருக்க, அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.