Tamilnadu
oi-Vishnupriya R
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 2 கிலோ மீட்டர் தூரம் அரிவாள் மீது நடந்து வந்து பக்தர்களுக்கு கருப்பசாமி அருள்வாக்கு அளித்ததாக நம்பப்படுகிறது.
நள்ளிரவில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை நிகழ்வு நேற்று நடந்தது.

செங்குறிச்சி குளக்கரை பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருப்பசாமி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆக்ரோஷமாக அரிவாளின் மீது நடந்தவாறு குளக்கரையில் இருந்து ஊர் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கருப்பசாமியிடம் குறி கேட்டனர் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஆக்ரோஷமாக கருப்பசாமி பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சுருட்டு பிடித்தபடியே அருள்வாக்கு கூறினார்.
ஆடி அமாவாசையையொட்டி நிறைய ஊர்களில் திருவிழா நடந்தது. மேல்மறையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அது போல் ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
