இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்தத் தகவல்கள் அதிர்ச்சியையும், பிசிசிஐ மீது விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி, ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்ற எந்தவிதமான விவாதமும் பிசிசிஐ-க்குள் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.