இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்த திமுக!- யார் போட்டியிடுகிறார்கள்? | The DMK has now announced the candidates who will contest in the by-elections.

Spread the love

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்

தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்

இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தற்போது அறிவித்திருக்கிறது. அதன்படி மதுராந்தகத்தில் திமுக சட்டத்துறை செயலர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா ஆகியோரும் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருக்கிறது.

வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *