> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதிலிருந்து, உலக நாடுகள் மீது வரி விதித்து வருகிறார்.
வரிகளைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றங்கள் அறிவித்த பிறகும், உலக நாடுகள் மீது வரி விதிக்க வேறு ரூட்டுகளைத் தேடி வருகிறார்.
இதனால், ட்ரம்ப் அடுத்த வரிகளை விதிப்பதற்கு முன்பு, வணிகர்கள் இருக்கும் செம்புகளை இப்போதிருந்த வரியில் ஏற்றுமதி செய்ய நினைத்து, வேகவேகமாக வணிகம் செய்து வருகின்றனர்.

> செம்பு சிப், செமிகண்டக்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏ.ஐ. டேட்டா சென்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றுக்கு செம்பின் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால், அங்கேயும் செம்பு சென்றுவிடுகிறது.
> உலக நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் பலவீனமடைந்திருப்பதும் செம்பு விலை உயர்விற்குக் காரணம்.
இன்னும் உயருமா?
உலக அளவிலான கமாடிட்டி நிபுணர் மைக் மெக்லோன் தனது எக்ஸ் பக்கத்தில் செம்பு விலை உயர்வு குறித்து, “சிகாகோ வர்த்தகச் சந்தை செம்பு வர்த்தகம் – கண்முன்னே காத்திருக்கும் ஆபத்தா?