இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், “சூர்யா சாருடைய ஃபேன்ஸோட பிளஸ்ஸிங்கும் அன்பும் எங்களுக்கும் வேணும். செட்ல மமிதா பைஜூ எனக்கு ஒரு லிட்டில் சிஸ்டர் மாதிரி. சூர்யா சார் எனக்கு ஒரு பிரதர். ஜி.வி. பிரகாஷ் கூட எனக்கு இது மூன்றாவது படம்.
எப்போதுமே என்னோட எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட உழைப்பைத்தான் ஜி.வி. கொடுப்பாரு. இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, அவங்களோட அம்மா-அப்பாவுக்கும் ரொம்பப் பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம்.
கண்டிப்பா ஜென்- சி தலைமுறைக்குப் பிடிச்ச படமா இருக்கும். படத்துல ஒரு பத்து நிமிஷத்துக்கு சூர்யா சாருக்கும் ராதிகா மேமுக்கும் இடையே ஒரு பயங்கரமான காமெடி சீன் இருக்கு” எனப் பேசினார்.

இதனை தொடர்ந்து அவரிடம், “சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், கஜினி படத்துல எல்லாம் லவ்வர் பாய் சூர்யா சாரைப் பார்த்திருக்கோம். இந்தப் படத்துலயும் அப்படி இருக்காரா?” எனத் தொகுப்பாளினி டிடி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த இயக்குநர் வெங்கி அத்லூரி, “இது ஒரு நியூ ஏஜ் திரைப்படமாக இருக்கும்” என்று கூறினார்.