“இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு திமுக வராததற்கு காரணம் இதுதான்” – விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார்! | At a press conference, Thirumavalavan remarked that the DMK is dissatisfied with the Congress.

Spread the love

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில், “டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாக் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எடுத்துள்ள முடிவு கவலையளிக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே, தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் இந்தத் தனிச்சன்னிச்சையான முடிவு தி.மு.க-வைப் பெரும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே இன்றைய ‘இந்தியாக் கூட்டணி “கூட்டத்தை தி.மு.க புறக்கணித்துள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இருப்பினும், ‘இந்தியாக் கூட்டணி’யுடன் இணைந்து வருங்காலத்தில் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் காங்கிரஸால் தன்னிச்சையாக த.வெ.க-வை அழைக்க முடியாது.

‘இந்தியா’ கூட்டணியின் மூத்த தலைவர்கள் எதிர்காலத்தில் த.வெ.க-வை கூட்டணியில் இணைக்க முடிவு செய்தால், அதை வி.சி.க முழுமனதோடு வரவேற்கும். தமிழகத்தில் அமைந்துள்ள புதிய த.வெ.க அரசு இன்னும் 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்றால் அது அவரின் தனிப்பட்ட அனுமானமாக இருக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *