அப்போது ஏன் சரவணனை விசாரிக்கவில்லை? இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு சொந்தக் கட்சி நிர்வாகியால் கட்சியின் பெண் உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார், அந்தப் பெண். இந்த நிலையில், `ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனைக் கைதுசெய்ய வேண்டும், தலைமைக்கும் இந்த விவகாரம் தெரியும் என அந்தப் பெண் கூறுகிறார். அப்படியென்றால் யார் அந்த தலைமை. ஒரு பெண் அமைச்சருக்கும் தெரியும் என்கிறார்.

அப்படியென்றால் யார் அந்த பெண் அமைச்சர்?” என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளனர். அத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.