ஒருவேளை, ஈரான் போர் விரைவில் முடியவில்லை என்றால், அந்நிய செலாவணி அதிகம் தேவைப்படும். அதனால், அதை பக்காவாக கணக்குப் போட்டு செலவு செய்வது புத்திசாலித்தனம்.
அதனால் தான், மோடி தங்கம் ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில், தங்கமும் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
முக்கியமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இவர்கள் முதலீடுகளை வெளியேற்றி செல்லும் போது, அவர்கள் டாலர்களாக தான் கொண்டு செல்வார்கள்.
அதனாலும், அந்நிய செலாவணி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது.
ஆக, இந்த மூன்றும் இப்போது இந்தியாவிற்கு மிக மிக முக்கியம். இதை இந்தியா எப்படி கையாண்டு சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.