இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆவணங்களை பரிசீலித்தது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப் ஐ ஆர் வரைவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.

பின்னர் அந்த வரைவு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026 அன்று காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து சில திருத்தங்களை மேற்கொண்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.