2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது.
இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங் அண்மையில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்ரீசாந்திடம் அவரும் ஹர்பஜனும் பாக்ஸிங் உடையில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் காட்டப்பட்டிருக்கிறது.