அவர் பேசுகையில், “இன்னைக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எல்லாரும் வந்து பார்த்தோம். ரசிகர்களோட பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தாக்கூடத் தளபதி படமா இருக்கும். இப்பவும் தளபதி படம்தான்.
இப்ப நம்ம தமிழ்நாட்டோட சி.எம். படத்தைப் பார்த்த ஒரு சந்தோஷம். ரசிகர்கள் எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க. என்னையும் ரசிகர்கள் எல்லாம் விடல.
டான்ஸ் ஆடியே ஆகணும்னு பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு, ரெண்டு வாட்டியும் அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரொம்ப ஜாலியா இருந்தது. ரசிகர்களும் அதுமாதிரி நிறைய செண்டிமெண்ட் சீன்களும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தப் படத்துல பார்த்தது அப்படியே நிஜமாயிடுச்சு!” என்றார்.
தொடர்ந்து அவரிடம் செக் மோசடி வழக்கு தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், “அதைப் பத்தி எனக்குத் தெரியாதுங்க. ரைட், நன்றி வணக்கம். என்னையெல்லாம் தளபதி மாதிரி அழ வைக்கவே முடியாது!” என்று ஜாலியாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.