பிறகு என் மீசையை எடுத்தப் பிறகுதான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சது. படத்தைப் பார்த்துவிட்டு விஜயகாந்த், “உனக்குத்தான் இதுல பெரிய அப்ரிசியேஷன் கிடைக்கும்” என்றார். அன்னைக்கு வில்லன். இன்னைக்கும் வில்லன்! வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
வில்லன் ஒரு பொண்ணைப் பார்த்த உடனே ‘பிடிக்குது’னு சொல்லிடுவான். ஆனால் ஹீரோ பன்னிரண்டாவது ரீல்லதான் சொல்லுவான்” என நகைச்சுவையாகப் பேசியவர், “யாராச்சும் லவ் பண்ணிட்டு இருந்தீங்கன்னா உடனே போய்ச் சொல்லிருங்க. உடனே இம்ப்ரஸ் பண்ணிடலாம். அதற்குப் பாடம் கத்துக்கணும்னா என் கூட வாங்க, அதற்கான ஃபீஸ் இருக்கு” என்று சிரித்தபடி கூறினார்.
இதனை தொடர்ந்து ராதிகாவிடம் காதலைத் தெரிவித்த தருணம் பற்றிப் பகிர்ந்துகொண்டவர், “நான் ஒரு பெண்கூட க்ளோஸாகப் பேசிட்டு இருந்தேன். அப்போது ராதிகா என்னைப் கடந்து போனாங்க. அப்போது நான், ‘How about getting married to me?’னு கேட்டேன்.
அதுக்கு அவங்க ஒரு பதில் சொன்னாங்க… அதை இங்க சொல்லமுடியாது” எனச் சிரித்துக்கொண்டே சொன்னவர், அரங்கில் அமர்ந்திருந்த ராதிகாவை நோக்கி, “நீதான் இறுதிவரை என் அன்புக் காதலி. என் மனைவியே ராதிகா” என்றார்.